"சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படும்
திருமணங்களுக்கு,
பக்காவாக அச்சடிக்கப்படும்
அழைப்பிதழ்கள் இங்கு."
எனப் பெருமை பேசிய மேனகாவில் தான்
அடிக்கக் கொடுத்திருந்தேன்
எனது திருமண அழைப்பிதழையும்.
சொன்ன தேதியில்,
சொன்ன நேரத்தில்,
சிறப்பாகத் தயாராகியிருந்தன
அழைப்பிதழ்கள் பெட்டிக்குள்.
திருப்தியுடன் காரைக் கிளப்பி
சாலையை எட்டிப் பிடிக்கையில் தான்
பாதையின் நடுவே நின்ற
அந்த மூவரைப் பார்த்தேன்
ஒருவனுக்கு முப்பது இருக்கும்
இரு சிறுவர்கள் அவனுடன்
பாதையை மறித்தமர்ந்து
கூடிப் பேசிக் கொண்டிருந்தனர்.
அருகில் ஒரு தண்ணீர் கேன்,
சிறிதளவு தண்ணீருடன்.
நடுவில் எதையோ வைத்து
சுற்றி அமர்ந்திருந்தனர்.
வீடு திரும்பும் அவசரத்தில் இருந்தவன்
ஹாரனில் வைத்த கை எடுக்கவில்லை.
காரியத்தில் மும்முரமான மூவரும்
ஏறிட்டும் பார்க்கவில்லை அந்த ஒலியை.
ஒலியெழுப்பி ஓய்ந்தபின்
குரல் கொடுத்தேன்
வழியை விட்டு
ஒதுங்கிசெல்லக் கேட்டு.
தலை தூக்கிப் பார்த்தவன்
தலை குனிந்து மீண்டும்
சிறுவர்களுடன் இணைந்து
காரியத்தில் கண்ணானான்
நான் வெறுத்துப் போன நொடியில்
தானாக எழுந்து நகர்ந்தனர் மூவரும்
முகத்தில் ஒரு நிம்மதியுடனும்,
உதட்டில் ஒரு சிரிப்புடனும்!
அப்போது தான் கவனித்தேன்
அது வரை அவர்கள் செய்ததை.
வெட்கத்தில், வெறுப்பில்
வெறுமையை உணர்ந்தேன்
வெட்கம், அவசரத்தில் கோபப்பட்ட என்னால்!
வெறுப்பு, காரணமில்லாமல் மீண்டும் என் மேல்!
வெறுமை, நான் கண்ட நிகழ்வுக்கு
தீர்வு ஏதும் தெரியாமல்!!
அந்த இடத்தில் இருந்தது
ஒரு இளநீரின் பாதி!
அந்த பாதியில் இருந்தது
சிறிது தேங்காய் மீதி!!
நடந்ததை ஜீரணித்துக் கொண்டு
நான் திரும்பிப் பார்க்கும் முன்
மூவரும் சென்று விட்டிருந்தனர்
அந்தத் தண்ணீர் கேனுடன்!!!
*****
பி.கு: படம் பிடித்து இந்தக் காட்சியை நிரந்தரமாக்க மனம் ஒப்பாததால் படமின்றி பதிக்கிறேன் கனத்த இதயத்துடன்...
திருமணங்களுக்கு,
பக்காவாக அச்சடிக்கப்படும்
அழைப்பிதழ்கள் இங்கு."
எனப் பெருமை பேசிய மேனகாவில் தான்
அடிக்கக் கொடுத்திருந்தேன்
எனது திருமண அழைப்பிதழையும்.
சொன்ன தேதியில்,
சொன்ன நேரத்தில்,
சிறப்பாகத் தயாராகியிருந்தன
அழைப்பிதழ்கள் பெட்டிக்குள்.
திருப்தியுடன் காரைக் கிளப்பி
சாலையை எட்டிப் பிடிக்கையில் தான்
பாதையின் நடுவே நின்ற
அந்த மூவரைப் பார்த்தேன்
ஒருவனுக்கு முப்பது இருக்கும்
இரு சிறுவர்கள் அவனுடன்
பாதையை மறித்தமர்ந்து
கூடிப் பேசிக் கொண்டிருந்தனர்.
அருகில் ஒரு தண்ணீர் கேன்,
சிறிதளவு தண்ணீருடன்.
நடுவில் எதையோ வைத்து
சுற்றி அமர்ந்திருந்தனர்.
வீடு திரும்பும் அவசரத்தில் இருந்தவன்
ஹாரனில் வைத்த கை எடுக்கவில்லை.
காரியத்தில் மும்முரமான மூவரும்
ஏறிட்டும் பார்க்கவில்லை அந்த ஒலியை.
ஒலியெழுப்பி ஓய்ந்தபின்
குரல் கொடுத்தேன்
வழியை விட்டு
ஒதுங்கிசெல்லக் கேட்டு.
தலை தூக்கிப் பார்த்தவன்
தலை குனிந்து மீண்டும்
சிறுவர்களுடன் இணைந்து
காரியத்தில் கண்ணானான்
நான் வெறுத்துப் போன நொடியில்
தானாக எழுந்து நகர்ந்தனர் மூவரும்
முகத்தில் ஒரு நிம்மதியுடனும்,
உதட்டில் ஒரு சிரிப்புடனும்!
அப்போது தான் கவனித்தேன்
அது வரை அவர்கள் செய்ததை.
வெட்கத்தில், வெறுப்பில்
வெறுமையை உணர்ந்தேன்
வெட்கம், அவசரத்தில் கோபப்பட்ட என்னால்!
வெறுப்பு, காரணமில்லாமல் மீண்டும் என் மேல்!
வெறுமை, நான் கண்ட நிகழ்வுக்கு
தீர்வு ஏதும் தெரியாமல்!!
அந்த இடத்தில் இருந்தது
ஒரு இளநீரின் பாதி!
அந்த பாதியில் இருந்தது
சிறிது தேங்காய் மீதி!!
நடந்ததை ஜீரணித்துக் கொண்டு
நான் திரும்பிப் பார்க்கும் முன்
மூவரும் சென்று விட்டிருந்தனர்
அந்தத் தண்ணீர் கேனுடன்!!!
*****
பி.கு: படம் பிடித்து இந்தக் காட்சியை நிரந்தரமாக்க மனம் ஒப்பாததால் படமின்றி பதிக்கிறேன் கனத்த இதயத்துடன்...
