Saturday, December 29, 2012

அஞ்சலி

பாரதப் பெண்ணே...
வீழ்ந்தது நீ 
விழித்தது தேசம் 

இளைய இந்தியா 
இன்று ஏந்திய மெழுகுவத்தி 
அகத்தின் இருள் 
அகல வழி தேடி 

 கபடதாரிகள் நாம் 
கருத்து பேதங்கள் பல 
கண்ணாடி வீடு நமது 
கல்லெறிவோம் மற்றவர் மீது 

விழித்தெழுவதும் மீண்டும் 
உறங்கச்செல்வதும் புதிதல்ல 
'நமதை' விட 'எனதை'
பெரிதெனக்  கருதும் நமக்கு 

இப்போதும் உறங்கிவிடுவோம் 
இரண்டொரு வாரங்களில் 

சிந்திக்கத் தெரிந்தவர்களுக்கு 
சிறியதொரு கேள்வி 
இன்னும் எத்தனை தங்கமகள்களை 
இழக்க வேண்டும் நம் பாரதத்தாய்?

எத்தனை இழப்புகளுக்குப்பின் 
மொத்தமாய் விழிப்போம் நாம்?

விடை தேடுவோம் 
வெளியில் அல்ல 
ஒவ்வொருவரும் நமக்குள் 
ஒளி பிறக்கும் அக இருள் மறைய.

--
Jeeva