Friday, September 25, 2009

முதல் வணக்கம்

நன்றி - http://www.visualforces.com


போகிற போக்கில் கடவுளுக்கு ஒரு வணக்கம்
உணவருந்தும் போது அருகில் ஒரு புத்தகம்
கணிணியில் தட்டிக் கொண்டே தொலைக்காட்சியில் ஒரு கண்ணும்
தசாவதாநிகளுக்கானது இந்த ஒரு யுகம்

நிற்க நேரமின்றி ஓடுகிறேன்
தேவை என்ன என அறியாமல்
அத்தனைக்கும் ஆசைப்படுகிறேன்
இழப்பது எதை எனத் தெரியாமல்

சோர்வுற்று இளைப்பாறும் வேளைகளில்
திரும்பிப் பார்த்தால்
புழுதி மட்டுமே பறக்கிறது
நான் வந்த பாதையில்

என் படங்கள் இல்லாவிடினும்
நான் கடந்த பாதையில்
சில மலர்களாவது பூத்துக் குலுங்க
என் பல முயற்சிகளில் இதுவும் ஒன்று

படம் பார்த்து கதை சொல்வது
எனக்குப் பிடித்த ஒன்று
படம் பார்த்து கவிதை சொல்ல
முயல்கிறேன் இங்கு

வேகமாக ஓடும் காலமும் - அதை விட
வேகமாக ஓடும் மனிதர்களும்
பழகிப் போன எனக்கு இது கால நிறுத்தம்,
சில மணித் துளிகளே ஆனாலும்!

படம் பார்த்து கவிதை சொல்ல,
கவிதையைப் போல
படம் பார்க்கையில் எல்லாம்
ஒரு பூ பூக்கும் இந்த தளத்தில்.

*****

1 comment:

  1. Puraviyaga oodum Jeevaa vin kavithai migavum azhagu.. vaazhthukal Jeeva :)

    ReplyDelete