Friday, October 2, 2009

ஒரு வேண்டுகோள்

நன்றி: http://ritemail.blogspot.com


இன்னும் சிறிது நேரம்,
எந்தப் புறம் விழுவது?
முடிவு செய்யவில்லை நான்.

சொல்லப் போனால்
முடிவெடுக்கும் அதிகாரம் உண்டா
எனத் தெரியவில்லை எனக்கு.

ஒன்று மட்டும் நிச்சயம்
நான் விழும் வேளையில்
இங்கிருக்க மாட்டான் இந்த சிறுவன்

மரம் வெட்டி
மீண்டும் வரும் வரை
என்னால் நிற்க முடியுமா தெரியவில்லை

ஒரு வேளை முடியாமல் போனால்?
சிறுவனே, என் காயத்தைப் பார்த்து போதும்
தள்ளி நில்லேன் சிறிது நேரம்

ஹ்ம், நான் ஒரு மரமண்டை
எந்த மனிதனுக்கு என் குரல் கேட்டிருக்கிறது
இவனுக்கு கேட்டிட?

என்ன,
உங்களுக்கு கேட்கிறதா
என் குரல்?

அது சரி, இருக்கும் போது
ஒன்றின் அருமை தெரியாத
மனிதர் தானே நீங்களும்?

*****

No comments:

Post a Comment